நற்செய்தி

முழுமனதோடு அன்பு செய். இறைவனையும், மனிதனையும்.

வழிகாட்டும் என் தெய்வமே

Posted by Stella on June 24, 2008


பல்லவி

வழிகாட்டும் விடிவெள்ளியே
குடில் மீது ஒளிகாட்டுதே

புவி மீது இறை மைந்தன் வரவானதே
இறைவார்த்தை நிறைவேறவே – இனி
நிலவாழ்க்கை நிலைமாறவே.

அனுபல்லவி

கருவாகி திருவாகி இறையாகி உருவாகி
குடிலோடு எருவோடு மரியன்னை மடியோடு
புல்லணை வந்தானவா – எம்
புவிதேவன் என்றானவா

சரணம்

உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்
பணிகின்ற ஞானியர் குணம் கேட்கிறேன்
பட்டம் புகழ் வாழ்வில் வீணாகிடும்
உந்தன் வரம் வந்தால் வானாகிடும்.

உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்
வினை தீர்க்க எனைச் சேர்த்தவா – முன்
அணை தனை அணைத்திட்டவா

எழிலோடு தொழுவோடு அழியாத புகழோடு
விழியோடு பிழைதன்னை அழிக்கின்ற தழலோடு
குடில் மீதில் விடிவானவா – எம்
இடி சோக முடிவானவா

^^^

 

One Response to “வழிகாட்டும் என் தெய்வமே”

  1. மிக அருமையான பாடல். நன்றிகள்.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>