வழிகாட்டும் என் தெய்வமே
Posted by Stella on June 24, 2008
வழிகாட்டும் விடிவெள்ளியே
குடில் மீது ஒளிகாட்டுதே
புவி மீது இறை மைந்தன் வரவானதே
இறைவார்த்தை நிறைவேறவே – இனி
நிலவாழ்க்கை நிலைமாறவே.
அனுபல்லவி
கருவாகி திருவாகி இறையாகி உருவாகி
குடிலோடு எருவோடு மரியன்னை மடியோடு
புல்லணை வந்தானவா – எம்
புவிதேவன் என்றானவா
சரணம்
உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்
பணிகின்ற ஞானியர் குணம் கேட்கிறேன்
பட்டம் புகழ் வாழ்வில் வீணாகிடும்
உந்தன் வரம் வந்தால் வானாகிடும்.
உனைத்தேடும் இடையர்கள் மனம் கேட்கிறேன்
வினை தீர்க்க எனைச் சேர்த்தவா – முன்
அணை தனை அணைத்திட்டவா
எழிலோடு தொழுவோடு அழியாத புகழோடு
விழியோடு பிழைதன்னை அழிக்கின்ற தழலோடு
குடில் மீதில் விடிவானவா – எம்
இடி சோக முடிவானவா
^^^

அந்தோணி முத்து said
மிக அருமையான பாடல். நன்றிகள்.